லக்விஜய நிலக்கரி வழங்கும் தற்போதைய நடைமுறையை மதிப்பீடு செய்ய குழுவொன்று நியமனம்!

லக்விஜய மின் உற்பத்தி நிலையத்திற்கு நிலக்கரி வழங்கும் தற்போதைய நடைமுறையை மதிப்பீடு செய்வதற்காக குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பின்வரும் நிபுணர்களை உள்ளடக்கியதாக இக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு அறிக்கை ஒன்றின் மூலம் அறிவித்துள்ளது:

பேராசிரியர் டபிள்யூ.டி.ஏ.எஸ். ரொட்ரிகோ (தலைவர்) – மின் பொறியியல் துறை, மொரட்டுவை பல்கலைக்கழகம்

கலாநிதி என்.ஏ.ஐ.டி. நிஸ்ஸங்க (உறுப்பினர்) – சிரேஷ்ட விரிவுரையாளர், இயந்திரப் பொறியியல் துறை, மொரட்டுவை பல்கலைக்கழகம்

கலாநிதி ஐ.யூ. அத்தநாயக்க (உறுப்பினர்) – சிரேஷ்ட விரிவுரையாளர், இயந்திரப் பொறியியல் துறை, மொரட்டுவை பல்கலைக்கழகம்

கலாநிதி ஆர்.எம்.டி.எஸ். குணரத்ன (உறுப்பினர்) – சிரேஷ்ட விரிவுரையாளர், இரசாயன மற்றும் செயன்முறைப் பொறியியல் துறை, மொரட்டுவை பல்கலைக்கழகம்

கலாநிதி உதித் விஜயவர்தன (உறுப்பினர்) – மின் மற்றும் இலத்திரனியல் பொறியியல் துறை, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்

கலாநிதி கீதால் சிறிவர்தன (உறுப்பினர்) – இயந்திரப் பொறியியல் துறை, ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம்

கே.எல்.ஆர்.சி. விஜயசிங்க (ஒருங்கிணைப்பாளர்) – மேலதிக செயலாளர் (மின்சக்தி மற்றும் மின்சக்தித் துறை மறுசீரமைப்புப் பிரிவு), வலுசக்தி அமைச்சு.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects